News February 28, 2025
பாஸ் வழங்குவது குறித்து நாளை சிறப்பு முகாம்

திருவண்ணாமலையில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, மாட வீதியில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. எனவே, மாட வீதியில் வசிப்பவர்களின் நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டும், அடையாள அட்டை வழங்கப்பட உள்ளன. அதையொட்டி, நாளை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) சிறப்பு முகாம் நடத்தி அவர்களுக்கு பாஸ் வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 21, 2025
திருவண்ணாமலையில் புதிய மினி டைடல் பூங்கா

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளுக்கு தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. ரூ.34 கோடி செலவில், 4 தளங்களுடன் இந்த டைடல் பூங்கா அமைக்கபட உள்ளது. ஓராண்டில் இதன் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் புதிய மினி டைட்டில் பூங்கா அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்திருந்தார். இதன்மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும்.
News April 21, 2025
முன்னாள் ஊராட்சித் தலைவர் பைக் மோதி பலி

திருவண்ணாமலையை அடுத்த இசுக்கழி காட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி(58). முன்னாள் ஊராட்சித் தலைவர். இவர், நேற்று இரவு தண்டரை கிராமத்தில் இருந்து வீட்டுக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். இசுக்கழி காட்டேரி கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த பைக், பழனி ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வெறையூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 20, 2025
மே 15 வரை அவகாசம் – ஆட்சியர் எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே 15 ஆம் தேதிக்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவுறுத்தியுள்ளார். அதன் பின்னர் தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, அபராதம் விதித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.