News March 15, 2025
பாலியல் குற்றாவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை

ஆண்டிபட்டி அருகே கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் (53). என்பவர் 2023.ல் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்து ராஜதானி போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று (மார்.14) பரமசிவத்திற்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.
Similar News
News April 21, 2025
வடுகபட்டியில் படித்த முன்னாள் மாணவர்களுடன் சாப்பிட்ட கவிஞர்

பெரியகுளம் அருகே வடுகபட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 70 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டார். அப்போது 70,ஆண்டுகள் முன் சேர்ந்து படித்த மாணவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துள்ளனர்
News April 20, 2025
தேனி மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஏப்.19) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News April 20, 2025
ஏலக்காய் மாலை அணிவித்த தேனி மாவட்ட தலைவர்

திண்டுக்கல்லில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெருங்கோட்ட அளவிலான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட பாஜக தலைவர் P.இராஜபாண்டியன் கலந்து கொண்டு மாநில தலைவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பேராசிரியர் இராம ஶ்ரீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.