News February 19, 2025

பள்ளி மாணவனை கத்தியால் வெட்டிய இருவர் கைது

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சீயமங்கலம் கிராமத்தில் பூபாலன் மற்றும் கோபால் இருவருக்கும் நிலப் பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று பூபாலன் மகன் 11ஆம் வகுப்பு படிக்கும் பார்த்தசாரதியை கோபால் மகன்கள் தங்கதுரை, தர்மதுரை ஆகிய இருவரும் கத்தியால் வெட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தங்கதுரை மற்றும் தர்மதுரை ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

Similar News

News April 21, 2025

கள்ளக்குறிச்சியில் மேலாண்மை நிர்வாகி பணிக்கு வேலைவாய்ப்பு

image

கள்ளக்குறிச்சியில் ஸ்டார் குரூப் நிறுவனத்தில் மேலாண்மை நிர்வாகி பணிக்கு ஆட்கள் சேர்ப்பு. இந்த வேலைக்கு 18 லிருந்து 26 வயதுக்குட்பட்டவர்கள் 10ஆம் வகுப்பு முடித்திருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மாதத்திற்கு ரூ.15,000 வழங்கபடுகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News April 21, 2025

கொளுத்தும் வெயில் தப்பிக்க எளிய டிப்ஸ்

image

கள்ளக்குறிச்சியில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதிலிருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS,எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலனி தயாரிப்பு பயிற்சி

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நாளை(ஏப்.22) காலை 10 மணி அளவில் சென்ட்ரல் புட்வேர் ட்ரைனிங் நடைபெற உள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு மையம் தெரிவித்துள்ளது. இதில் பத்தாம் வகுப்பு முதல் பட்டய படிப்பு படித்தவர்கள் வரை பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் ஆண் பெண் இருபாலரும் பங்கேற்கலாம் எனவும் அறிவிப்பு.

error: Content is protected !!