News March 4, 2025
பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

ரிஷிவந்தியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுடைய பள்ளி மாணவன், பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த வேலுமணி(53) என்ற நபர் சிறுவனுக்கு லிப்ட் தருவதாக அழைத்துச் சென்று காப்பு காட்டுக்குள் கத்தியை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து போலீசார் வேலுமணியை போக்சோவில் கைது செய்தனர்.
Similar News
News April 20, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்(20.4.2025 ) இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 20, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்களை தெரிஞ்சிக்கோங்க மக்களே! கள்ளக்குறிச்சி-9445000519, 04151-222449, சங்கராபுரம்-9445000520, 04151-235329, திருக்கோவிலூர்-9445000521, 04153-252316, உளுந்தூர்பேட்டை-9445000522, 04149-222255, கல்வராயன் மலை-9488776061, சின்னசேலம்-9445461907, 04151-257400, வானாபுரம்-8946097728. *மிக முக்கிய எண்களான இவற்றை உடனே சேவ் பண்னுங்கள்.நண்பர்களுக்கும் பகிரவும்
News April 20, 2025
கள்ளக்குறிச்சி: திருமணத்தடை நீங்க செல்ல வேண்டிய கோவில்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் ‘பவர்புல்’ வீரட்டேசுவரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அந்தகாசூரனை சிவன் வதம் செய்த திருத்தலம் இது. இங்குள்ள சாமிக்கு வஸ்திரம் சாத்தி சிறப்பு வழிபாடு செய்தால் போதும், காரி திருமணத்தடை மற்றும் வீடுகட்டுவதற்கான தடை நீங்கும் என்பது நம்பிக்கை. *திருமணம் நடைபெறாத 90s கிட்ஸ்களுக்கு பகிரவும்*