News December 4, 2024
பல்லடம் கொலை: புதிய கோணத்தில் விசாரணை

பல்லடம் அருகே செம்மலை கவுண்டன் பாளையம் ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை வழக்கில், தற்போது போலிசார் 14 தனி படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, வாய்க்கால் வழியாக வந்து கொள்ளையடிக்கும் கும்பல் இதில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் புதிய கோணத்தில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 8, 2025
திருப்பூர்: தீராத நோய் தீர இங்க போங்க!

திருப்பூர், பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தில், பழமைவாய்ந்த வலுப்பூர் அம்மன் கோயில் உள்ளது. இங்கு சர்வ நோய்களை தீர்க்கும் சக்திவாய்ந்த பத்ரகாளியம்மன் குடிகொண்டிருக்கிறாள். மன்னர் விக்ரமாத்த சோழனின் மகளுக்கு ஏற்பட்ட வலிப்பு நோய், அம்மனை வணங்கியதால் குணமானது. இதனால் வலுப்பூர் அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். நோய் பாதிப்பு உள்ளவர்கள், அம்மனை சென்று வழிபட்டு வந்தால், நிச்சயம் நோய் குணமாகுமாம்.
News August 8, 2025
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அமித் இன்று மண்டலம் 4, வார்டு எண் 39 பெரியாண்டிபாளையம் பகுதியில் உள்ள, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக கட்டடங்கள் கட்டப்படுவதை, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் உடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.
News August 8, 2025
திருப்பூர்: இந்த நம்பர கண்டிப்பா SAVE பண்ணுங்க!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் – 0421-2971100.
வருவாய் அலுவலர் – 0421-2971122.
மாவட்ட வழங்கல், அதிகாரி – 0421-2971116.
தலைமை கல்வி அதிகாரி – 0422-2305943.
மாவட்ட சமுகநல அலூவலர் – 0421-2971168
திருப்பூர் போக்குவரத்துத்துறை – 0421-2422424.
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் -0424-2265650.
தீயணைப்புத்துறை – 0421-2472101.
அரசு மருத்துவமனை – 0421-2422201. இதை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்!