News March 20, 2025

பத்திர பதிவுத் துறையில் முறைகேடு – எதிர்கட்சி தலைவர்

image

புதுச்சேரியில் நேற்று பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் சிவா பேசியதாவது:- தமிழகத்தை போல சிபிஎஸ்இ பாடத்திட்டத்தையும் எடுத்துவிட்டால் நன்றாக இருக்கும். இரயில், துறைமுகம் ஆகியவை நம் கையில் இருந்தால் வளர்ச்சி இருக்கும் என்று தெரிவித்தார். மேலும், பத்திர பதிவுத் துறையில் கோடி கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

Similar News

News March 20, 2025

தமிழ்நாட்டில் செய்வதை போல புதுச்சேரியிலும் செய்ய கோரிக்கை

image

இன்று (20-3-25) சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய நேரு எம்எல்ஏ, தமிழகத்தில், பென்சனர்கள் இருப்பிடத்திற்கே சென்று வாழ்நாள் சான்றிதழ் பெற ரூ.70 கட்டணத்தில் சேவை வழங்கப்படுகிறது. அதை பின்பற்றி புதுச்சேரியிலும் இதை நடைமுறைப்படுத்த அஞ்சல் துறையின் India Post Payments Bank உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி பென்ஷனகளின் சிரமத்தை போக்க வேண்டும் என்றார்.

News March 20, 2025

கேஸ் பயனாளிகள் வங்கி கணக்கில் ரூ.150 ரூ.300

image

பட்ஜெட் மீதான பொது விவாதத்தின் நடுவே, குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் நேற்று பேசும்போது, “தற்போது 2024 அக்டோபர் முதல் ஜனவரி 2025 வரை வாங்கப்பட்ட கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு மஞ்சள் நிற அட்டைக்கு ரூ.150 வீதமும், சிகப்பு நிற அட்டைக்கு ரூ.300 வீதமும், அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.11.50 கோடி செலவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

News March 20, 2025

புதுவை: ஹெல்மெட் அணியாத 37,107 பேருக்கு அபராதம்

image

சட்டப்பேரவையில் அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், ஒவ்வொரு குடிமகனும், பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தி அரசு பிரசாரமும் தொடங்கியுள்ளது. இதுவரை புதுவையில் ஹெல்மெட் அணியாத 37,107 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் உச்சநீதிமன்றம் விபத்து மரணத்தை கண்காணித்து கேட்கிறது. இதனால் புதுவையில் மக்கள் அவசியம் தலைகவசம் அணிய வேண்டும் என பதில் அளித்தார்.

error: Content is protected !!