News March 27, 2024

பதற்றமான வாக்குச்சாவடிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

image

வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை என கண்டறிந்து அந்தந்த வாக்குச்சாவடி மையத்தினை இன்று திருவாரூர் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சாரு ஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் திருவாரூர் நகராட்சி துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News April 20, 2025

திருவாரூர் அமையும் பவர் பிளாண்ட்

image

தமிழகத்தில் முதல் முறையாக திருவாரூர் மற்றும் கரூரில் தலா 15 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்களை பேட்டரி வசதியுடன் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இத்திட்டம் பொது – தனியார் கூட்டு முயற்சியால் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையங்கள் 9,151 மெகாவாட் திறனில் அமைக்கப்பட உள்ளன.

News April 19, 2025

கடலுக்குள் மூழ்கும் முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள்

image

முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் நாட்டின் மிகப்பெரிய அலையாத்தி காடுகளுள் ஒன்றாகும். சுமார் 120 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த அலையாத்தி காடு, புயல், கடல் அரிப்பு, சுனாமி போன்ற பேரிடர்களில் இருந்து மக்களை காத்து வருகிறது. இந்நிலையில், சமீபத்திய ஆய்வு ஒன்றில் உயரும் கடல் மட்டம் காரணமாக 2100-க்குள் முத்துப்பேட்டையில் 2,382 ஹெக்டேர் அலையாத்தி காடுகள் நீரில் மூழ்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 19, 2025

போக்குவரத்துக் கழகத்தில் வேலை; விண்ணப்பிப்பது எப்படி?

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு முடித்து, விருப்பம் உள்ளவர்கள் ஏப்.21-ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக் செய்து<<>>, ஆன்லைனில் விண்ணப்பிக்க என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். அதில் விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

error: Content is protected !!