News March 21, 2024

நெல்லை: வேட்புமனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள்

image

பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்நிலையில் நேற்று (மார்ச் 20) வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று யாரும் வந்து மனு தாக்கல் செய்யவில்லை, போலீசாரின் சோதனை மட்டுமே நடைபெற்றது.

Similar News

News April 11, 2025

நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராவதில் சிக்கல்

image

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக அண்ணாமலைக்கு பின்னர் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. தற்போது பாஜக மாநில தலைவருக்கு புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பத்தாண்டுகள் பாஜக உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற நிலையில் நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்து 7 ஆண்டுகள் ஆவதால் மாநிலத் தலைவராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

News April 10, 2025

119 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள்

image

நெல்லை மாவட்டத்தில் இயங்கி வரும் சத்துணவு மையங்களில், 119 சமையல் உதவியாளர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு தகுதியான பெண்கள், வரும் 15ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். இதற்கான மாதிரி விண்ணப்ப படிவம் www.tirunelveli.nic.in மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News April 10, 2025

நெல்லை: ம.சு பல்கலைக்கழக பேராசிரியர் மீது பாலியல் புகார்

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதிலிருந்து தற்போது கல்லூரியில் வேலை செய்யும் வரை தொடர்ந்து பாலியல் ரீதியான துன்புறுத்தலை வேதியியல் துறை பேராசிரியர் கொடுப்பதாக தற்காலிக பேராசிரியர் ஒருவர் மாநில மகளிர் ஆணையத்திற்கும் உயர்கல்வி துறைக்கும் மனு அனுப்பியுள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்து பல்கலைக்கழகம் விசாரிக்க தமிழக உயர் கல்வி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!