News April 24, 2025

நீர்நிலைகளில் போலீஸ் ரோந்து – எஸ் பி உத்தரவு

image

கோடை விடுமுறை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர்நிலைகளுக்கு ஏராளமானவர்கள் சென்று வருகிறார்கள். இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க நீர்நிலைப் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். மேலும் நீர் நிலைகளில் குளிக்க வருபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

Similar News

News April 24, 2025

குமரியில் 609 குளங்களில் மண் எடுக்க அனுமதி – ஆட்சியர் 

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று (ஏப்.24) விவசாயிகள் கோரிக்கை தின கூட்டத்தில் பேசும்போது;குமரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 609 குளங்களில் மண் எடுக்க அனுமதி கிடைத்துள்ளது.அந்த குளங்களில் மண் எடுக்க விண்ணப்பித்த விவசாயிகளின் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.6.98% விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளது.மேலும் 724 குளங்களில் மண் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

News April 24, 2025

பிளஸ் டூ மாணவர்களுக்கான தனித்துவப் பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மீனா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தனித்துவமான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புக்கான நுழைவுத் தேர்வு குமரி மாவட்டத்தில் ஏப்.29,30 தேதிகளில் நடக்கிறது. அரசு பள்ளி அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இந்த தேர்வினை எழுதலாம். இதற்கு இணையதளம் மூலம் பதிவு செய்திட வேண்டும் என்று அதில் அவர் கூறி உள்ளார். *ஷேர்

News April 24, 2025

ப்ளாக் பெல்ட் வாங்கிய மாணவனை பாராட்டிய எம்எல்ஏ

image

பைங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட, மூள்ளுர்துறை கிராமத்தை சேர்ந்த செல்வன். செ. தர்ஷன் இந்திய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கருப்பு பெல்ட் (Black belt), ஒரு நிமிடத்தில் 10 விரல்கள் மூலம் 57 புஸ்அப்ஸ் (Push Ups) செய்து உலக சாதனையும் படைத்துள்ளார். அவரை ராஜேஷ்குமார் எம்எல்ஏ பாராட்டினார்.

error: Content is protected !!