News April 30, 2025

நாளை காவல்துறை சார்பில் குறை தீர்ப்பு கூட்டம்

image

கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து வாரம் தோறும் புதன்கிழமை மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் நாளை (ஏப்ரல் 30) குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் மனுக்கள் மற்றும் ஏனைய மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 30, 2025

செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது

image

உத்திரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் (23) எட்டையாபுரம் சாலையில் நடந்து சென்றபோது இவரின் 120000 ரூபாய் மதிப்புள்ள செல்போனை, சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த அருண்குமார் (22), மாடசாமி (24), முத்துசெல்வம் (20), முத்தீஸ்வரன் (27) ஆகிய நான்கு பேரும், பறித்துச் சென்றுள்ளனர். இதனை அடுத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நான்கு பேரையும் விளாத்திகுளம் போலீசார் கைது செய்தனர்.

News April 30, 2025

தூத்துக்குடி: லாரியில் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு

image

திருச்செந்தூர் மயிலப்புரம் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி மணிகண்டன் தற்போது உடன்குடி கொட்டாங்காடு பகுதியில் குடியிருந்து வருகிறார். நேற்று நேற்று (ஏப்.29) திருச்செந்தூர் சென்று விட்டு பைக்கில் ஊருக்கு திரும்பி உள்ளார். தோப்பூர் விலக்கு அருகே சென்ற போது நிலை தடுமாறி முன்னாள் சென்ற லாரியில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 30, 2025

ஊர்க்காவல் படை தளபதிக்கு எஸ்பி பாராட்டு

image

டெல்லி ஊர்க்காவல் படை உள்துறை அமைச்சகம் சிறப்பாக பணியாற்றிய ஊர்க்காவல் படையினருக்கு விருதுகள் வழங்குகிறது. அந்த வகையில் தூத்துக்குடி ஊர்காவல் படையில் 20 ஆண்டுக்காலம் சிறப்பாக பணியாற்றிய ஊர்க்காவல் படை தளபதி உலகம்மாளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது. இதனையடுத்து, அவரை நேற்று கோரம்பள்ளத்தில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

error: Content is protected !!