News February 21, 2025
நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் விலகல்

நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளராக 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ராயப்பன் இன்று (பிப்.,21) நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், அறிக்கையில், கட்சியில் இருந்து நிரந்தரமாக விலகுவதாகவும், இதுவரை உடன் பணியாற்றியவர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 22, 2025
காஞ்சி ஆட்சியர் தொடங்கி வைத்தார்

காஞ்சி மாநகராட்சிக்குட்பட்ட நத்தப்பேட்டை பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் இன்று (22.02.2025) காலை 8 மணிக்கு நெகிழி கழிவு சேகரிப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார். துணை ஆட்சியர் ஆஷிப் அலி, மாநகராட்சி ஆணையர் நவேந்திரன், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக் குப்பை நெகிழி சுத்தப்படுத்தினர்.
News February 22, 2025
தீவிரமாகும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்

பணி நீக்கத்தைக் கண்டித்து தொழிலாளர்கள் ஆலை வளாகத்திலேயே கடந்த 16 நாள்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் சாம்சங் தொழிற்சாலையில் 14 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
News February 21, 2025
பஞ்சு கிடங்கில் தீ விபத்து: ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் நாசம்

காஞ்சிபுரம் மேட்டுத்தெரு அருகே உள்ள பள்ளிக்கூடத்தான் தெருவில் உள்ள வீடு ஒன்றின் மாடியில், கிடங்கு அமைத்து, அதில் மெத்தை தயாரிக்கும் மூலப்பொருட்களான பஞ்சு உள்ளிட்ட பொருட்களை, நுாருல்லா,50. என்பவர் நடத்தி வருகிறார். இந்த கிடங்கில், நேற்று (பிப்.20) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கிடங்கின் நான்கு புறங்களிலும் தீ மளமளவென பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.