News April 5, 2024
நாமக்கல்: நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி

மக்களவை 24 தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் ச.உமா அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹர்ஜித் கவுர் அவர்கள் முன்னிலையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News April 19, 2025
நாமக்கல் மாநகராட்சியின் புதிய ஆணையர் பொறுப்பேற்பு

நாமக்கல் மாநகராட்சியின் புதிய ஆணையராக சிவக்குமார் இன்று 19ஆம் தேதி பொறுப்பேற்று கொண்டார். ஏற்கனவே இருந்த ஆணையார் மகேஸ்வரி திருப்பூருக்கு இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய ஆணையராக சிவக்குமார் இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.
News April 19, 2025
திமிங்கல எச்சம் விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது!

ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி அருகே பல கோடி மதிப்பிலான, 18 கிலோ எடை கொண்ட திமிங்கல எச்சம் விற்பனை செய்ய முயன்ற வெங்கடேசன், அப்துல் ஜலீல், ரவி ஆகிய 3 பேரை, ராசிபுரம் வனத்துறை அலுவலர்கள் கைது செய்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
News April 19, 2025
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் சிறப்புகள்!

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உள்ள மூலவர் சுமார் 6 அடி உயரமுள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடதுபுறம் சேலையும் அணிவிக்கப்படுகிறது. இக்கோவில் உள்ள திருச்செங்கோடு மலை ஒருபுறம் பார்க்கும் போது ஆண் போலவும், மறுபுறம் பெண் போலவும் தோற்றம் அளிக்கிறது. SHARE பண்ணுங்க!