News April 15, 2025

நாமக்கல் காவல் துறை சார்பில் வாகன ஏலம்!

image

நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 23 வாகனங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் முன்பணமாக ரூ. 5 ஆயிரத்தை, 17ம் தேதி தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள், நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் செலுத்த வேண்டும். நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 17, 2025

நாமக்கல் வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

image

நாமக்கல்: வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் உதவித்தொகை திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.600 வரை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. எனவே தகுதியானவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார். மேலும், <>www.tnvelaivaaippu.gov.in<<>> என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

News April 17, 2025

நாமக்கல்: சூதாடிய 20 பேர் கைது !

image

திருச்செங்கோடு மலையடிவாரம் உள்ளிட்ட இடங்களில், பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் காசு வைத்து சூதாடுவதாக திருச்செங்கோடு போலீசார் கிடைத்த தகவல் அடிப்படையில், அங்கு ஒரு வீட்டில் போலீசார் சுற்றி வளைத்து சோதனையிட்ட போது சுமார் 20 பேர் காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.அனைவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் வாகனங்கள் மற்றும் 4 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்

News April 17, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிப்பார். அதன்படி இன்று (16/04/2025) இரவு வந்து பணி அலுவலர்கள் விவரம் நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் – சங்கர பாண்டியன் (9655230300), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர்- சரண்யா (8778582088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!