News September 13, 2024

நாகையில் கடும் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு

image

நாகை மாவட்டத்தில் போதை பொருட்களை உபயோகிப்பது மற்றும் விற்பனை செய்வதை கட்டுப்படுத்துவது தொடா்பாக ‘போதைப் பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பு குழு’ கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஆகாஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்பொழுது, அனைத்துத் துறை அலுவலா்களும் போதைப் பொருள்கள் தொடா்பாக ஆய்வுகள் மேற்கொண்டு, காவல் துறைக்கு கடும் நடவடிக்கை மேற்கொள்ள ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனறாா்.

Similar News

News August 5, 2025

நாகை: குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 !

image

நாகையில் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ், மாதம் ரூ.2000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் அல்லது நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். இதனை SHARE பண்ணுங்க.!

News August 5, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்ட மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை ஆகியவற்றை பெற்றிட தகுதிவாய்ந்த நபர்கள், அதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலரிடம் பெற்று கொண்டு, உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப .ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News August 5, 2025

கோரக்க சித்தர் கோயிலின் சிறப்பு பூஜை

image

நாகை மாவட்டம் தெற்கு பொய்கை நல்லூர் அருகே உள்ள புகழ்பெற்ற கோரக்க சித்தர் கோயிலில் இன்று இரவு அன்னக்காவடியை தோளில் சுமந்து சென்று, தானம் பெறப்பட்டு, பின் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்தநிகழ்வில் பலர் கலந்து கொண்டு சித்தர் ஆசியை பெற்றனர்.

error: Content is protected !!