News April 25, 2025

நாகையில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்.

image

நேற்று முன்தினம் நாகை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரியாவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வேளாங்கண்ணி செல்லும் ECR சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சொகுசு கார் ஒன்றில் சோதனை செய்தபோது, காரில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது. இதில் கவிவர் மன்(வயது 26), விக் னேஷ்(21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Similar News

News April 25, 2025

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இன்றே கடைசி நாள்

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவி குழுக்கள் போன்ற சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதினை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்க ஏப்.25 ஆம் தேதியான இன்றே கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News April 25, 2025

ராகு கேது தோஷம் நீக்கும் நாகநாதசுவாமி கோயில்

image

நாகைக்கு அருகில் மயிலாடுதுறை, கீழப்பெரும்பள்ளத்தில் நாகநாதசுவாமி கோயில் உள்ளது. நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. நாளை ஏப்.26 மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தியாம். SHARE IT.

News April 25, 2025

பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

error: Content is protected !!