News April 28, 2025
நாகை: தொழிலாளர் தினத்தில் கிராம சபை கூட்டம்

நாகை மாவட்டத்தில் 193 கிராம ஊராட்சிகளிலும் மே.1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம ஊராட்சிகளில் 1.4.2024 முதல் 31.3.25 வரை முடியவில்லை காலத்தில் கிராம ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொண்ட வரவு செலவின் மற்றும் இதர விவரங்களை கிராம சபையில் படித்து காண்பித்து முதல் பெறுதல் போன்றவை நடைபெறும். இதில், அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 28, 2025
நாகை: பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் TamilNilam Geo-Info என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில் நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ அந்த கூகுள் மேப்புடன், சர்வே எண் ஆகிய விவரங்கள் தெரியும். இதில் வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்த்து கொள்ளலாம். அனைவருக்கும் Share செய்து பயனடையுங்கள்..
News April 28, 2025
நாகை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய எண்கள்

உங்கள் பகுதிகளில் இருக்கும் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய வட்டாட்சியர் எண்கள் ▶வேதாரண்யம்-04369-250457, ▶திருக்குவளை-04365-245450, ▶கீழ்வேளூர்-04366-275493, ▶நாகப்பட்டினம்-04365-242456. உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்கள்
News April 28, 2025
நாகை சத்துணவு மையங்களில் வேலை

நாகை மாவட்டத்தில் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் 93 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்கான கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி, விருப்பம் உள்ளவர்கள் இன்றைக்குள் ( ஏப்.28) இந்த <