News March 15, 2025
தொடர் கதையாகும் மான் உயிரிழப்பு!

கீரனூர் அடுத்த பொன்மாரி கல்லூரி அருகில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புள்ளிமான் அடிபட்டு இறந்துள்ளது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தண்ணீர் குடிப்பதற்காக அடிக்கடி வெளியே வரும்போது, வாகனங்கள் மோதி அடிபட்டு இறப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் காட்டுப்பகுதிக்குள் ஆங்காங்கே தண்ணீர் வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News April 13, 2025
புதுக்கோட்டையில் இரவு நேர ரோந்து காவல் பணி விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (13.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
News April 13, 2025
வேண்டியதை அருளும் விராலிமலை முருகன்!

புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற தலங்களில் இந்த விராலிமலை முருகன் கோயிலும் ஒன்று. இங்குள்ள முருகனை மற்ற நாட்களில் வணங்குவதை விட தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News April 13, 2025
மீனம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் இளைஞர் பலி

புதுக்கோட்டை மாவட்ட கந்தர்வகோட்டை அருகே மீனம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் பொற்பனைகோட்டை சேர்ந்த மாரிமுத்து (23) இளைஞர் உயிரிழந்துள்ளார். 7 மேற்பட்டவர்கள் கந்தர்வகோட்டை அரசு மருந்துவமனை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாரிமுத்துவின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது