News April 9, 2025

தேர்வு கேள்வித்தாள் திருட்டு.. என்ன தண்டனை தெரியுமா?

image

மாணவர்களின் கல்வித் திறனை அறியவே பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு தண்டனை அளிக்க அரசு பிஎன்எஸ் சட்டத்தில் வழிவகை செய்துள்ளது. அந்த சட்டத்தின் 4-வது பிரிவில் கேள்வித்தாள் திருட்டு மற்றும் அதை விற்பனை செய்வோருக்கு அபராதத்துடன் குறைந்தபட்சம் 1 ஆண்டு, அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

Similar News

News April 19, 2025

திமுக வரலாற்று தோல்வியை சந்திக்கும்: எல்.முருகன்

image

திமுக வரலாற்று தோல்வியை சந்திக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திருவள்ளூரில் நேற்று பேசிய CM ஸ்டாலின், எந்த ஷா வந்தாலும் TNல் ஆட்சியை பிடிக்க முடியாது என கூறியிருந்தார். இந்நிலையில், 2026-ல் திமுகவுக்கு தோல்வி காத்திருக்கிறது என எல்.முருகன் பதிலளித்துள்ளார். NDA கூட்டணி பெரிதாக சாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

News April 19, 2025

மீன்கள் விலை கிடுகிடு உயர்வு!

image

தூத்துக்குடி துறைமுகத்தில் மீன்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சீலா மீன் ₹1,300, விளமீன், ஊளி மீன், பாறை மீன், நண்டு ஆகியவை தலா ₹600, கீழவாளை, பண்டாரி, தம்பா மீன்கள் தலா ₹300 – ₹600 வரை விற்பனையாகிறது. ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடித் தடைக்காலம் என்பதால் தென் மாவட்டங்களில் சில்லறை விலையில் 1 கிலோவுக்கு ₹50 – ₹100 வரை அதிகரித்துள்ளது. உங்கள் ஊரில் ஒரு கிலோ மீன் விலை என்ன?

News April 19, 2025

தங்க குண்டு மணி, பழங்கால பானை கண்டெடுப்பு!

image

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே தங்க குண்டு மணி, பழங்கால பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் அகழாய்வில் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. அந்த வகையில் ஆபரணங்களிலும் தமிழர்கள் அதிக கவனம் செலுத்தியதற்கான சான்று கொடும்பாளூரில் நடந்த அகழாய்வில் கிடைத்துள்ளது. அதனுடன் அழகிய மண்பானையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!