News March 27, 2025
தேனியில் வீட்டின் கதவை உடைத்து திருட்டு

ஆண்டிபட்டி அருகே வைகை புத்தூரைச் சேர்ந்தவர் தினேஷ் பாபு. குடும்பத்துடன் கோவையில் தங்கிப் பணி செய்து வருகிறார். மகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர் குடும்பத்துடன் கேரளாவில் உள்ள உறவினர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தார். இரு நாட்கள் கழித்து வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைத்து 1 பவுன் சங்கிலி திருடு போயிருந்தது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News August 9, 2025
தேனி: கேஸ் DELIVERY அப்போ இதை பண்ணுங்க!

தேனி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். 18002333555 எண்ணுக்கு அல்லது<
News August 9, 2025
தேனி: ஆகஸ்ட். 18 வரை மட்டுமே… மிஸ் பண்ணிடாதீங்க

தேசிய குடற்புழு நீக்க நாள் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை தமிழக முழுவதும் முகாம் நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் துணை சுகாதார நிலையம் கல்லூரி பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள 1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.மறக்காம SHARE பண்ணுங்க.
News August 9, 2025
உயர்கல்வி சேர மாணவர்களுக்கு உதவித்தொகை காசோலை

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் நேற்று பள்ளிக் கல்வித்துறை சார்பாக சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது பள்ளிக்கல்வித்துறை சார்பாக உயர் கல்வி சேர்வதற்காக மாணவர்களுக்கு 62,000 காசோலையை மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் மாணவர்களுக்கு வழங்கினார். இதில், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.