News March 15, 2025
தேனியில் பிளஸ் டூ மாணவி தற்கொலை போலீசார் விசாரணை

தேனி, கூழையனூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகள் யுவஸ்ரீ (17). 12-ம் வகுப்பு மாணவியான இவருக்கு சில வருடங்களாக வயிற்று வலி இருந்ததால் மாணவியால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் மன வேதனையில் இருந்த மாணவி நேற்று முன்தினம் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (மார்.14) அவர் உயிரிழந்தார். இது குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை.
Similar News
News March 16, 2025
அண்ணணிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த தங்கை கைது

தேனி பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முருகன். அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இவரது சகோதரி செல்வி 50. கடந்த நவம்பரில் முருகன் உடல் நிலை பாதிப்படைந்ததால் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இதனிடையே முருகனின் ஏ.டி.எம்., கார்டை எடுத்து செல்வி முருகனின் அனுமதி இல்லாமல் ரூ. 5.04 லட்சத்தை எடுத்தார். தங்கை பண மோசடி செய்ததை முருகன் கண்டறிந்து போலீசில் புகாரளித்தார்.
News March 15, 2025
மன அழுத்தம் நீங்க இந்த கோவிலுக்கு போங்க

தற்போதைய சூழலில் பலருக்கும் குழப்பம்,மன அழுத்தம் இருந்து வருகிறது தீராத மன அழுத்தம் நீங்க தேனி மாவட்டத்தில் உள்ள இந்த கோவில்களுக்கு செல்லலாம். அனுமந்தன்பட்டியில் உள்ள அனுமன் கோவில், பெரியகுளம் கைலாசநாதர் கோவிகளுக்கு சென்று, அங்கு நடைபெறும் நித்ய பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் மன அழுத்தம் நீங்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது .
News March 15, 2025
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

தேனி மாவட்ட அணைகளின் (மார்ச் 15) நீர்மட்டம்: வைகை அணை: 59.84 (71) அடி, வரத்து: 253 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 153 க.அடி, திறப்பு: 344 க.அடி, மஞ்சளார் அணை: 31.45 (57) அடி, வரத்து: 1 க.அடி, திறப்பு: 45 க.அடி, சோத்துப்பாறை அணை: 70.71 (126.28) அடி, வரத்து: 3 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 32.20 (52.55) அடி, வரத்து: 9 க.அடி, திறப்பு: இல்லை.