News April 22, 2025

தேனி : தாய்க்கு மகன் கட்டிய கோவில்

image

தேனி மாவட்டம் சுருளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெகந்த் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது தாயார் ஜெயமீனா கடந்த 10 வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். தனது தாயின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக சுருளி அருவியில் 85 அடி உயரத்தில் ஜெயமீனா என்ற பெயரில் கோவிலை கட்டி உள்ளார் .தாய்க்காக மகன் கட்டிய கோவிலை காண பலரும் சென்று வருகின்றனர்.

Similar News

News April 23, 2025

தேனியில் இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் தகவல்

image

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையத்தின் அங்கீகரிக்கப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர்கள் தாலுகா மற்றும் ஆயுதப்படை பதவியில் காண 1299 காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது இந்நிலையில் தேனி மாவட்டம் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நிலை வழிகாட்டு மையம் வளாகத்தில் வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி காலை 10 மணி அளவில் இலவச பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தகவல்

News April 23, 2025

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; மாமனுக்கு 20 ஆண்டுகள் சிறை 

image

2023ம் ஆண்டு கம்பம் அருகே 45 வயது பெண் தனது 15 வயது மகளுடன் வசித்தார். சிறுமிக்கு தாய்மாமன் உறவுமுறை கொண்ட ராஜகோபால்(37), சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு 2வது திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறி தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் தாயார் புகாரில் மகளிர் போலீசார் ராஜகோபாலை போக்சோவில் கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.15000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது

News April 22, 2025

தேனி : தென்னையில் அதிக மகசூல் பெற அரிய வாய்ப்பு

image

தமிழக அரசின் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பாக தேனி மாவட்ட அளவிலான தென்னை சாகுபடி கருத்தரங்கம் நடக்க உள்ளது. இதில் தென்னை சாகுபடிபற்றியும், சாகுபடி முறை, மகசூல் வழிமுறை பற்றி விளக்கம் அளிக்கப்படும். தேனியில் உள்ள மாடர்ன் மஹால் காலை 10 மணி முதல் மாலை வரை 22.04.2025 , 23.04.2025 ஆகிய 2 தினங்கள் நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த பிற விவசாயிகளுக்கும், நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.

error: Content is protected !!