News March 16, 2025
தேனி: இன்னல்களை அகற்றி அரவணைக்கும் காமதேனு

தேவதானப்பட்டி மூங்கிலணையில் வேண்டிய வரங்களை வாரி வழங்கும் கற்பக விருட்சமாய், பக்தர்களின் இன்னல்களை அகற்றி அரவணைக்கும் காமதேனுவாய் அருள்பாலிக்கிறாள் மூங்கிலணை காமாட்சி. பிள்ளை வரம், திருமணப் பாக்கியம், தொழில் முன்னேற்றம் வேண்டுவோர், மனமுருகி அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். இங்கே வந்து அம்மனை வழிபடும்போது கௌளி ஒலித்தால் அப்போது, வேண்டியது நிச்சயம் பலிக்கும் என்பது நம்பிக்கை.
Similar News
News March 17, 2025
தேனி காவலர் குடியிருப்பில் மீட்கப்பட்ட நல்ல பாம்பு

தேனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காவலர் குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் பாம்பின் நடமாட்டம் இருப்பதை கண்ட குடியிருப்பு வாசிகள் தேனியைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான பாம்பு கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த பாம்பு கண்ணன் குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த சுமார் 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பினை பத்திரமாக மீட்டு வனத்துறையினர் உதவியுடன் வனப்பகுதியில் விடுவித்தார்.
News March 17, 2025
தேனியில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தலைமையில் தேனி மின் உதவி கொட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (மார்ச்.18) காலை 11 மணி முதல் பகல் ஒரு மணி வரை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தேனி, போடி, ராசிங்காபுரத்தை சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என தேனி செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.
News March 17, 2025
தேனியில் மார்ச் 21-ல் புத்தகத் திருவிழா

தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் 3-வது புத்தகத் திருவிழா வருகிற மார்ச் 21 ல் நடக்கிறது.பழனிசெட்டிபட்டியில் உள்ள மேனகா மில்ஸ் மைதானத்தில் புத்தக திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மைதானத்தை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் ஆய்வு செய்தார். டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, தேனி ஏ.எஸ்.பி., கேல்கர் சுப்ரமணிய பாலசந்திரா, கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், தேனி வட்டாட்சியர் சதீஸ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்