News April 22, 2025

தென்காசி: வாகனங்கள் ஏலம் ஆட்சியர் தகவல்

image

தென்காசி அலகு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் ஏப்ரல் 26. காலை 11.00 மணிக்கு தொடங்கி மாலை 5.00 மணி வரை ஏலம் நடத்தப்பட உள்ளது. ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 23.04.2025 முதல் 25.04.2025 வரையிலான நாட்களில் தென்காசி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை சார்பு ஆய்வாளர் கட்டுப்பாட்டின் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிடலாம்

Similar News

News April 23, 2025

விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை

image

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2025-2026ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விடுதிகளில் மாணவ / மாணவியர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இவ்விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. கடைசி நாள்:மே.5 மாலை 5 மணி ஆகும். தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News April 23, 2025

ராயகிரி அருகே 1300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

image

சிவகிரி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தலைமை காவலர் சுந்தர்ராஜ் மற்றும் இளையராஜா ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ராயகிரி அருகே TN 79 E 3274 என்ற எண் கொண்ட Tata Ace வாகனத்தில் 1300 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது. வாகனத்தை ஓட்டி வந்த துரைசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த குருசாமி என்பவர் மகன் கிருஷ்ணசாமி என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 23, 2025

தென்காசி: அங்கன்வாடியில் வேலை.. இன்றே கடைசி

image

தென்காசி மாவட்ட திட்ட அலுவலரின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கு நேரடியாக நியமனம் செய்யப்பட இருக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்.23) கடைசி நாள். <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும். Share It.

error: Content is protected !!