News March 23, 2025
தூத்துக்குடியில் கணிணி பட்டா வழங்கும் நிகழ்வு

தூத்துக்குடி எம்எல்ஏ அலுவலகத்தில் வைத்து கடந்த மாதம் கணினி பட்டா இல்லாதவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு முதல் தவணையாக 150 பேருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக 131 பேருக்கு கணினி பட்டா வழங்கும் நிகழ்ச்சி எம்எல்ஏ அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பட்டாக்களை பயனாளிகளிடம் வழங்கினார்.
Similar News
News April 30, 2025
செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது

உத்திரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் (23) எட்டையாபுரம் சாலையில் நடந்து சென்றபோது இவரின் 120000 ரூபாய் மதிப்புள்ள செல்போனை, சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த அருண்குமார் (22), மாடசாமி (24), முத்துசெல்வம் (20), முத்தீஸ்வரன் (27) ஆகிய நான்கு பேரும், பறித்துச் சென்றுள்ளனர். இதனை அடுத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நான்கு பேரையும் விளாத்திகுளம் போலீசார் கைது செய்தனர்.
News April 30, 2025
தூத்துக்குடி: லாரியில் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு

திருச்செந்தூர் மயிலப்புரம் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி மணிகண்டன் தற்போது உடன்குடி கொட்டாங்காடு பகுதியில் குடியிருந்து வருகிறார். நேற்று நேற்று (ஏப்.29) திருச்செந்தூர் சென்று விட்டு பைக்கில் ஊருக்கு திரும்பி உள்ளார். தோப்பூர் விலக்கு அருகே சென்ற போது நிலை தடுமாறி முன்னாள் சென்ற லாரியில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 30, 2025
ஊர்க்காவல் படை தளபதிக்கு எஸ்பி பாராட்டு

டெல்லி ஊர்க்காவல் படை உள்துறை அமைச்சகம் சிறப்பாக பணியாற்றிய ஊர்க்காவல் படையினருக்கு விருதுகள் வழங்குகிறது. அந்த வகையில் தூத்துக்குடி ஊர்காவல் படையில் 20 ஆண்டுக்காலம் சிறப்பாக பணியாற்றிய ஊர்க்காவல் படை தளபதி உலகம்மாளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது. இதனையடுத்து, அவரை நேற்று கோரம்பள்ளத்தில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.