News April 3, 2025
தூத்துக்குடி இரவு ரோந்து விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
Similar News
News April 11, 2025
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

தூத்துக்குடி பத்திரகாளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாட்ஷா என்பவரது வீட்டில் மொட்டை மாடியில் செட் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சண்முகபுரத்தை சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மேலும், இதில் பரூக் என்ற 13 வயது சிறுவன் காயமடைந்தார். இது குறித்து மத்தியபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 11, 2025
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவுரை

சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு பகிர்ந்துள்ளது. இரவு நேரங்களில் மற்றொரு வாகனத்தை முந்தும்போது அல்லது நாம் செல்லும் வழித்தடத்தில் (Lane) இருந்து மற்றொரு வழித்தடத்திற்கு மாறும்போது சரியான திசையில் இண்டிக்கேட்டரை (Indicator) ஒளிரச் செய்ய வேண்டும் என்றும், இது நமக்கும், நம்மால் மற்றவர்களுக்கும் விபத்து ஏற்படாமல் தவிர்த்திடும் என்று குறிப்பிட்டுள்ளது.
News April 11, 2025
நலவாழ்வு மையங்களுக்கு மருத்துவ உபகரணங்களை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் விழாவில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தூத்துக்குடி, கோவில்பட்டி சுகாதார மாவட்டங்களில் உள்ள 180 நலவாழ்வு மையங்களுக்கான மருத்துவ உபகரணங்களை தூத்துக்குடி எம்.பி கனிமொழி வழங்கினார். இதில் அமைச்சர் கீதாஜீவன், ஆட்சியர் இளம்பகவத் உடனிருந்தனர்.