News April 15, 2025
தீராத நோய்களை தீர்க்கும் கொங்கு நாட்டு கோயில்!

சூலூரில் வைத்தியநாதர் கோயில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இத்தல ஈசன் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். கரிகாலச் சோழன் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்குதற் பொருட்டு, கொங்கு நாட்டில் பல சிவாலயங்களை எழுப்பி திருப்பணி செய்தான். அவற்றுள் இக்கோயிலும் ஒன்று என்கிறது சோழனின் பூர்வ பட்டயம். இங்கு வந்து பூஜை செய்தால் தீராத பிணிகள் கூட தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. SHARE IT!
Similar News
News August 9, 2025
கோவை:10ம் தேதி இந்த ரயில் சேவை ரத்து

கோவை மாவட்ட ரயில்வே நிர்வாகத்தினர் இன்று கூறியதாவது: வரும் 10ம் தேதி காலை 9.40 மணிக்கு, போத்தனூர் பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் மெமு ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யபட்டுள்ளது. அதே போல அன்று மதியம் 1.05 க்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து போத்தனூர் வரை வரும் மெமு ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
News August 8, 2025
கோவையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கோயமுத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை (09.08.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம், கோவை வடக்கு மண்டலம் (வார்டு எண் -3) மடாலயம், சின்னவேடம்பட்டி ஆகிய பகுதியில் நடைபெற உள்ளது என கோவை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் இன்று தெரிவித்துள்ளார். மேலும் இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
News August 8, 2025
கோவை: பணம், தங்கத்துடன் இலவச திருமணம்!

கோவை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பல்வேறு கோயில்கள் உள்ளது. இக்கோயில்களில் சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் ) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் உங்கள் அருகே உள்ள அரசு நிர்வாக கோயில் அலுவலகத்தை அணுகலாம். SHARE IT