News April 13, 2025

திறனறிவு தேர்வில் 508 பேர் தேர்ச்சி பெற்று மாநில சாதனை

image

மாநில அளவில் தேசிய வருவாய் வழி திறனறிவு தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. சுமார் 2 லட்சத்து 65 ஆயிரம் பேர் எழுதி, இந்த தேர்வில் மாநில அளவில் 6595பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 508 பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் சாதனை பிடித்துள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பிளஸ் 2 பயிலும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

Similar News

News August 10, 2025

காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் சரிவு

image

நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று சீசன் நீடிக்கும் நிலையில் கடந்த ஒரு வாரமாக காற்றின் வேகம் ஏற்றம் இறக்கமாக உள்ளது. இதனால் பழவூர், காவல்கிணறு, கலந்தபனை உள்ளிட்ட பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி ஏற்ற இறக்கமாக உள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த காற்றாலை மின் உற்பத்தி நேற்று 3000 மெகாவாட்டை கடந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 9) அதிகபட்ச காற்றாலை மின் உற்பத்தி 2190 மெகாவாட்டாக சரிந்தது.

News August 10, 2025

நெல்லை மாவட்ட இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஆக.09) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

News August 9, 2025

நெல்லையில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் – 3 பேர் கைது

image

நெல்லை மாவட்ட காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி மேல அரியகுளத்தில் சுடலையாண்டி(72), சேர்மவேல்(60), ராமசுப்பிரமணியன்(25) ஆகியோரது பட்டறையை சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட அபாயகரமான ஆயுதங்களான 9 அரிவாள்கள் கைப்பற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்தகவலை நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!