News August 9, 2024
திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

76-சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, திருவள்ளுவர் சிலைக்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளார். கடலோர பாதுகாப்புப்படையினர் அதிநவீன படகுகளில் கடலில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும், லாட்ஜூகள், ரயில், பஸ் நிலையங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Similar News
News August 5, 2025
குமரியில் மதபோதகர் போக்சோவில் கைது!

கன்னியாகுமரி: தக்கலைப் பகுதில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் மூலச்சல் பகுதியைச் சார்ந்த வர்கீஸ்(55) என்பவர் மத போதகராக இருந்து வருகிறார். இவர் கிறிஸ்தவசபையில் வேதாகம வகுப்பிற்கு வந்த 16 வயது சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். இதுபற்றி சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்போரில், தக்கலை போலீசார் மதபோதகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
News August 5, 2025
குமரி ரயில் நிலைய விரிவாக்க பணிகள் தீவிரம்

கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருவதைத் தொடர்ந்து கன்னியாகுமரி ரயில் நிலையம் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு புதிய மின் நிலையம், பயணிகளுக்கு தேவையான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
News August 4, 2025
குமரியில் 7 காவல் நிலையங்கள் தரம் உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம், தென் தாமரைக்குளம், அஞ்சு கிராமம், கொற்றிக்கோடு, பளுகல், கடையால மூடு, மண்டைக்காடு ஆகிய 7 காவல் நிலையங்கள் தற்போது உதவி ஆய்வாளர் காவல் நிலையங்களாக இருந்து வருகிறது. இந்த 7 காவல் நிலையங்களும் ஆய்வாளர் அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.