News March 19, 2025
திருப்பூர் மாவட்ட காவல்துறை ரோந்து விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 19.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம், ஊதியூர், மூலனூர் ஆகிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News March 20, 2025
திருப்பூரில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திருப்பூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, ஆகியவற்றை செலுத்தக்கூறி, மாநகராட்சி சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. மேலும் வார இறுதி நாட்களிலும் வரி வசூல் செய்யப்பட்டது. இந்நிலையில் முறையாக வரி செலுத்தாத, 568 வீடுகளில் குடிநீர் இணைப்பு, துண்டிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே வரி செலுத்தாதவர்கள் உடனடியாக வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News March 20, 2025
திருப்பூர்: வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

திருப்பூர், முத்தனம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் ராக்கியாபாளையம் பகுதியில் பால்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பாலசுப்பிரமணியம் மற்றும் அவருடைய மனைவியும், பால்கடைக்கு வியாபாரம் பார்க்க வந்துள்ளார். அப்போது வீட்டில் பின்பக்கம் வழியாக உள்ளே சென்ற மர்மநபர், ரூ.85 ஆயிரம் பணத்தை திருடி சென்றார். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
News March 19, 2025
திருப்பூர் மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.