News March 18, 2025
திருப்பூரில் வேலை வாய்ப்பு முகாம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்புதுறை (ம) தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் சார்பில் வரும் 29ஆம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாம் பல்லடம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் 8, 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் பங்கேற்றலாம். வேலை இல்லாதவர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமை மிஸ் பண்ணிடாதீங்க. அப்புறம் Share பண்ணுங்க.
Similar News
News March 19, 2025
திருப்பூர்: காரில் 500 மீ இழுத்து செல்லப்பட்ட பெண் பரிதாப பலி

கோவை அருகே சரவணம்பட்டியை சேர்ந்த சுப்புலட்சுமி (40) ஸ்கூட்டரில் சென்றபோது, பல்லடம் அருகே ஒரு கார் மோதியது. இதில், அவர் காரின் முன்பகுதியில் சிக்கி, அரை கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். அருகில் பைக்கில் வந்த கிருஷ்ணகுமார் (34) லேசான காயமடைந்தார். பொதுமக்கள் காரை பிடித்து நேற்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் காரை ஓட்டிய சதீஷ்குமாரை (40) விசாரித்து வருகின்றனர்.
News March 18, 2025
இரவு நேர ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விவரம்

திருப்பூர் மாவட்டத்தில், தங்களது பகுதியில் இன்று, 18.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கயம், சேவூர், மடத்துக்குளம், குண்டடம் ஆகிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
News March 18, 2025
திருப்பூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

திருப்பூரில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பெருமளவில் உள்ளனர். அவர்களுக்காக வரும் 20ம் தேதி வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் காலை 10 மணிக்கு இந்த பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. மேலும், இது தொடர்பான சந்தேகங்களுக்கு 04212248524 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்