News August 9, 2024
திருச்செந்தூர் கோயில் உண்டியல் காணிக்கை இவ்வளவா?

திருச்செந்தூர் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.5.82 கோடி ஜூலை மாதம் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. அதேபோல், தங்கம் 3,787 கிராமும், வெள்ளி 49,288 கிராமும், 1535 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இதில் 2,000 ரூபாய் நோட்டுகள் 17 இருந்தது. அதேபோல் யானை பராமரிப்புக்கான உண்டியல் மூலம் 2,34,189 ரூபாயும் கிடைத்துள்ளது.
Similar News
News August 5, 2025
NOTE : தூத்துக்குடி மக்களே.. இந்த தகவல் மிக முக்கியம்!

க.இளம்பகவத் – மாவட்ட ஆட்சியர் – 0461-2340601.
ஆல்பர்ட் ஜான் – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – 0461-2340200.
இரா.ஐஸ்வா்யா – கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை – 0461-2340575.
ஆ. இரவிச்சந்திரன் – மாவட்ட வருவாய் அலுவலர் – 0461-2340400.
*இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க*
News August 4, 2025
தூத்துக்குடி இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News August 4, 2025
தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி – 4 பேருக்கு இரட்டை ஆயுள்

தூத்துக்குடி தட்டார்மடம் அருகே இடைச்சிவிளை கிராமத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு 3 சகோதரர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி, தந்தை மகன் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.