News April 9, 2025
திருச்சியில் மதுக்கடைகள் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 10-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டிருக்கும். அதனுடன் இணைந்து இயங்கும் மது கூடங்கள் FL2/FL3/FL3A/FL3AA & FL 11 உள்ளிட்ட அனைத்து பார்களும் மூடப்பட்டிருக்கும். மேலும், அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பிரதீப்குமார் அறிவித்துள்ளார்.
Similar News
News April 19, 2025
போக்குவரத்துக் கழகத்தில் வேலை விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் 176 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஏப்.,21ஆம் தேதிக்குள் <
News April 19, 2025
சோமரசம்பேட்டையில் கபடி போட்டிக்கு அழைப்பு

திருச்சி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் கபடி போட்டி வரும் மே.3, 4 ஆகிய தேதிகளில் சோமரசம்பேட்டையில் நடைபெற உள்ளது. இதில் முதல் பரிசாக ₹.50,000, 2-ம் பரிசு ₹.30,000, 3-ம் பரிசு ₹.25,000, 4-ம் பரிசு ₹.25,000 வழங்கப்பட உள்ளது. மேலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு சுழற் கோப்பையும் வழங்கப்பட உள்ளது. இதில் சுற்று வட்டார பகுதியில் உள்ள கபடி வீரர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News April 19, 2025
பெண்கள் பாதுகாப்பிற்கு 24 மணி நேர சேவை

பெண்கள் மீதான குடும்ப வன்முறை மற்றும் பாலியல் சீண்டல்களை தடுக்கும் வகையில் திருச்சி மாவட்ட காவல்துறை, தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பெண்களை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம் எனவும், பெண்கள் மீதான குடும்ப வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர சேவை எண் 181 என்பதை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. SHARE செய்ங்க