News August 19, 2024
திருச்சி பாலியல் குற்றவாளிக்கு மாவுக்கட்டு

திருச்சியில் 9 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞரை தேடி வந்தனர். அப்போது சிதம்பரத்தில் பதுங்கியிருந்த இளைஞரை கைது செய்ய முயன்றபோது அவர் தப்பியோடியுள்ளார். அப்போது கீழே விழுந்ததில் இளைஞரின் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 24, 2025
திருச்சியில் ஏப்.28, பி.எஃப் குறைதீர் கூட்டம்

திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான ஏப்ரல் மாத பி.எஃப் குறைதீர் கூட்டம் வரும் 28ஆம் தேதி, தென்னூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு பி.எஃப் தொடர்பான குறைகளுக்கு தீர்வு பெறலாம் என பி.எஃப் கமிஷனர் ஆசிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
News April 24, 2025
இ-சேவை மையத்தில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதிகளா ?

உங்களுக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, வருமானம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வெறும் 60 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் புகார் அளிக்கலாம். இந்த தகவலை இப்போதே SHARE பண்ணுங்க!
News April 24, 2025
அஞ்சலி செலுத்த வாடிகன் புறப்பட்ட திருச்சி எம்எல்ஏ

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு சார்பில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துவதற்காக கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும், திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் விமான மூலம் இன்று வாடிகன் புறப்பட்டார். அவரோடு அமைச்சர் ஆவடி நாசார் மற்றும் மத போதகர்கள் வாடிகன் செல்கின்றனர்.