News April 17, 2024
திருச்சி அருகே விபத்து; 5 பேரின் நிலை?

எடப்பாடியிலிருந்து கும்பகோணம் நோக்கி நேற்று காலை அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.திருச்சி திருவானைக்காவல் அருகே பஸ் சென்றபோது தூத்துக்குடியில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்கு உரம் முட்டைகளை ஏற்றி சென்ற லாரி திடீரென மோதியது.இதில் பஸ்ஸில் பயணம் செய்த 5 பேர் காயமடைந்தனர்.அவர்களை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்
Similar News
News April 19, 2025
திருச்சி: கோடை கால சுற்றுலா செல்ல சூப்பர் இடம்!

திருச்சியில் அடிக்கிற வெயிலுக்கு இதமா எங்கயாச்சும் போய்ட்டு வந்தா நல்லா இருக்கும் என்று தோன்றுகிறதா? கவலையை விடுங்க. திருச்சிக்கு வடக்கே 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பச்சமலை, ஒரு பசுமையான மலைத்தொடராகும். நீர்வீழ்ச்சிகள், பசுமையான தோட்டங்கள் என பச்சை மலைக்கு ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன. திருச்சியில் இருந்து ஒரே நாளில் கிளம்பி சுற்றிப்பார்த்துவிட்டு வீடு திரும்ப இது சூப்பர் இடமாகும். SHARE!
News April 19, 2025
முதுநிலை நீட்தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம்

மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் மூலம் நடைபெறும் முதுநிலை நீட் தேர்வு இந்த ஆண்டு ஜூன்.15-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு திருச்சி உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தற்போது தொடங்கியுள்ளது. https://natboard.edu.in என்ற இணையதளத்தில் மே.7-ம் வரை விண்ணப்பிக்கலாம் மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
News April 19, 2025
போலி பதநீர் விற்பனை – சித்த மருத்துவ அலுவலர் எச்சரிக்கை

திருச்சி மாவட்ட முன்னாள் சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீப காலமாக பதநீர் அதிகம் விற்பனையாகிறது. இதில் அதிகம் போலியானவை. எனவே பதநீர் பருகும் போது எச்சரிக்கையுடன் வாங்க வேண்டும். பலர் பதநீருக்கு பதில் அதே சுவை கொண்ட பவுடர்களை சர்க்கரையில் சேர்த்து பதநீர் போல விற்பனை செய்கின்றனர். இதில் பொது மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.