News March 24, 2025
திண்டுக்கல்: நகரத்தை அதிரச் செய்த வெடி சத்தம்

திண்டுக்கல் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் பயங்கர வெடிச்சத்தம் இன்று(மார்ச் 24) கேட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் என்ன சத்தம் என்று வெளியில் பயத்துடன் வந்து பார்த்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே இது போன்ற பயங்கர வெடிச்சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் உள்ளது.
Similar News
News April 29, 2025
திண்டுக்கல் லிங்கத்திலிருந்து கிளம்பிய அதிசய ஊற்று!

திண்டுக்கல் மாவட்டம் சுக்காம்பட்டியிலுள்ள வாஸ்தீஸ்வரர் கோயிலுக்கு ஒரு தனிச் சிறப்புண்டு. இந்தக் கோயிலில் உள்ள சிவலிங்கத்தில் இருந்து சிறிய நீரூற்று உள்ளது. அந்த நீரைப் பருகினால் தோல் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும் என்கிறார்கள் பக்தர்கள். ஆகையால், இந்த நீரை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் வழக்கமும் அக்கோயிலில் உண்டு. பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News April 29, 2025
போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற மே.2ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளன. இப்பயிற்சியானது திறன்மிக்க வல்லுநர்களால் மாதிரித் தேர்வுகளும் இலவசமாக நடத்தப்பட உள்ளது. இவ்வலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது விவரங்களைப் பதிவு செய்து வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News April 29, 2025
திண்டுக்கல் பெண்களிடம் இருக்க வேண்டிய எண்கள்

திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல்துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதன்படி ▶️நிலக்கோட்டை -04543-230493, ▶️ஒட்டன்சத்திரம்- 04553-241007, ▶️வடமதுரை -04551-238199, ▶️ திண்டுக்கல் -0451-2427928, ▶️கொடைக்கானல்- 04542-241225, ▶️பழனி- 04545 – 241032. பெண்களே இது போன்ற முக்கிய எண்களை SHARE செய்து SAVE பண்ண சொல்லுங்க.