News April 2, 2024
திண்டுக்கல்: 31 பேர் கைது: தட்டி தூக்கிய போலீஸ்

திண்டுக்கல் மதுவிலக்கு டி.எஸ்.பி. சுந்தரபாண்டியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் திண்டுக்கல், நிலக்கோட்டை, நத்தம், வடமதுரை வேடசந்தூர், பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்னர். அப்போது மதுவிற்ற மாணிக்கம், வனராஜா, முத்துக்குமார், நாகராஜ், ஜோசப் ராஜ், உள்ளிட்ட 31 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 485 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்
Similar News
News April 19, 2025
திண்டுக்கல் காவல் வாகனங்கள் ஆய்வு

திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகம் அருகே உள்ள வளாகத்தில் காவல் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், அவர்கள் அறிவுறுத்தலின்படி ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் அவர்கள் இன்று (19.04.2025) ஆய்வு மேற்கொண்டார்கள். காவல் வாகனங்கள், குறிப்பாக உதிரிபாகங்கள் மாற்ற வேண்டிய வாகனங்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டது
News April 19, 2025
பழனி: பெண் சிசுவை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்

பழனி அருகே சண்முக நதி சாலை ஓரத்தில் உள்ள புளியமரத்தின் அடியில் குழந்தையின் அழுகுரல் கேட்டு வாகன ஓட்டி ஒருவர் சென்று பார்த்தபோது பையில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண் குழந்தையின் சிசுவை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 19, 2025
திண்டுக்கல் பேருராட்சி எண்கள்

▶️செயல் அலுவலர், அய்யம்பாளையம் பேரூராட்சி: 7824058251
▶️செயல் அலுவலர், வத்தலகுண்டு பேரூராட்சி: 7824058253
▶️செயல் அலுவலர், சின்னாளப்பட்டி பேரூராட்சி: 7824058254
▶️செயல் அலுவலர், எரியோடு பேரூராட்சி: 7824058255
▶️செயல் அலுவலர், நத்தம் பேரூராட்சி:7824058258
▶️செயல் அலுவலர், நிலக்கோட்டை பேரூராட்சி: 7824058260
▶️செயல் அலுவலர், பாளையம் பேரூராட்சி: 7824058261
SHARE பண்ணுங்க!