News March 29, 2025

தாமரை இலை பறித்தால் கடும் நடவடிக்கை

image

சுசீந்திரம் குளம், பறக்கை குளம், பால்குளம், தேரூர் குளம், மாணிக்கம் ஆகிய குளங்கள் பறவைகள் பாதுகாப்பு குளங்களாக உள்ளன. இக்குளங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் அதிகம் வந்து செல்கின்றன. இந்த குளங்களில் அளவுக்கு அதிகமாக தாமரைகள் வளர்ந்து காணப்படுகின்றன. இந்த தாமரைகளை பறவைகளுக்கு இடையூறாக பறிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று  மாவட்ட வன அதிகாரி தெரிவித்துள்ளார்.

Similar News

News April 6, 2025

வேண்டியதை நிறைவேற்றும் இசக்கியம்மன் திருக்கோயில்

image

கன்னியாகுமரி, முப்பந்தலில் அமைந்துள்ளது அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோவில். நினைத்ததை வேண்டி பித்தளை, வெண்கலம் , வெள்ளி போன்ற உலோகங்களால் ஆனா உடல் உருவத்தை நேர்த்திக்கடனாக செய்தால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். தமிழ் மாதத்தின் கடைசி செவ்வாய் இங்கு சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். இங்கு வேண்டினால் குழந்தை பிரச்சனை, நீண்ட நாள் உடல் பிரச்சனை அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்கள்

News April 6, 2025

குமரியில் 120 அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம் – ஆட்சியர் 

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் குமரி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 120 அங்கன்வாடி பணியாளர், 2 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும்11 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்காக இம்மாதம் 22 ஆம் தேதி வரை அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

News April 6, 2025

மின நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டத்தில் 230 மனுக்கள் 

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம் நாகர்கோவில், தக்கலை மற்றும் குழித்துறை ஆகிய 3 இடங்களில் நேற்று (ஏப் 5) நடைபெற்றது. இந்த முகாமில் நாகர்கோவிலில் 114 மனுக்களும், குழித்துறையில் 44 மனுக்களும், தக்கலையில் 72 மனுக்களும் என மொத்தம் 230 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!