News April 4, 2025
தமிழில் பெயர் பலகை- ஆட்சியர் வேண்டுகோள்!

மே 15- க்குள் தமிழில் பெயர் பலகை வைப்பதற்கு கால அவகாசம்.தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே,
சேலம் மாவட்டத்தில் உள்ள கடைகள்,வணிக சங்கங்கள்,உணவு நிறுவனங்கள்,பள்ளி, கல்லூரிகள்,தொழிற்சாலை சங்கங்கள் தங்கள் குழு உறுப்பினர்களுக்கு இத்தகவலைத் தெரிவித்து ஒத்துழைப்பு வழங்கிட ஆட்சியர் வேண்டுகோள்
Similar News
News April 18, 2025
சேலத்தில் ரூ.35,000 சம்பளத்தில் வேலை !

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் நேற்று(ஏப்.17) வெளியிட்டுள்ள அறிக்கையில், திட்ட மேலாண்மை அலகில் பணிபுரிய அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Tech, M.B.A., M.Sc., படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தற்காலிக பணிக்காக மாதம் ரூ.35,000 மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு 25ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News April 17, 2025
சேலத்தில் ரூ. 17½ லட்சத்துடன் பிளஸ்-1 மாணவன் மீட்பு

சேலத்தில் நேற்று, 17 வயது சிறுவன் ஒருவன் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை அணுகி தனக்கு வேலை வாங்கித் தருமாறு கோரியுள்ளான். இதில் சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுநர், சிறுவனை சோதனையிட்டபோது பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் விசாரனையில், பெற்றோருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வந்தது தெரியவந்தது.
News April 17, 2025
ஏற்காடு, பூலாம்பட்டிக்கு ஜாக்பாட்! ₹20 கோடியில் புதிய வசதிகள்!

சுற்றுலாத் துறையின் மானியக் கோரிக்கையில், ஏற்காடு மற்றும் பூலாம்பட்டி ஆகிய முக்கிய சுற்றுலாத் தலங்களில் வாகன நிறுத்துமிடம், நடைபாதை, பூங்காக்கள், உணவகங்கள் மற்றும் தகவல் மையங்கள் அமைப்பதற்காக ரூபாய் 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு, பயணிகளை ஈர்க்கும் வகையிலும், அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் பயன்படுத்தப்படும்.