News January 23, 2025
தமிழக கடற்கரையில் 33% கடல் அரிப்பால் பாதிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் ஏற்பட்டு வரும் கடல் அரிப்பு சம்பந்தமாக தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி ராமநாதன் தலைமையிலான குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது. பின் செய்தியாளரிடம் பேசிய விஞ்ஞானி ராமநாதன், 1990ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை எங்கள் மையம் சார்பில் செயற்கைக்கோள் வரைபடம் மூலம் ஆய்வு செய்ததில் தமிழக கடற்கரையில் 33% கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
Similar News
News August 9, 2025
தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று (ஆக. 9) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News August 9, 2025
தூத்துக்குடி இளைஞர்களே.. ஊர் காவல் வேலை ரெடி!

தூத்துக்குடி மாவட்ட மீனவ ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. 20 காலியிடங்கள் உள்ளன. வரும் ஆக. 19ம் தேதி தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் காலை 10 மணி – மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட நீச்சல் தெரிந்த ஆண்கள் உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம். தூத்துக்குடி இளைஞர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.
News August 9, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும்.. ரூ.62,000 சம்பளம்!

பொதுத்துறை நிறுவனமான ஓரியண்டல் இன்சூரன்ஸ்-ல் தமிழ்நாட்டுக்கு 37 உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு சம்பளமாக மாதம் ரூ.22,405 முதல் 62,265 வரை வழங்கப்படும். மேலும் Tier I, Tier II-வாக தேர்வு நடத்தப்படும். <