News June 25, 2024

தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உலக குருதி கொடையாளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாமில் உயிர்காக்கும் பொருட்டு தன்னார்வலராக ரத்த தானம் செய்த நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பதக்கங்களையும் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ண இன்று (24.06.2024) வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டார்

Similar News

News April 21, 2025

அரசு பேருந்து நடத்துநர், ஓட்டுநர் வேலை வாய்ப்பு

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. அதன்படி, கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள்<> இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இதற்கு இன்றே (ஏப்.21) கடைசி நாள். எனவே அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…

News April 21, 2025

விக்கிரமங்கலம் அருகே கார் மோதி மூதாட்டி பலி

image

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உல்லியக்குடியைச் சேர்ந்தவர் சரோஜா(80). இவர் தனது வீட்டின் வாசலில் இருந்தபோது, அந்த வழியாக சென்ற கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மூதாட்டி சரோஜா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து காரை ஓட்டி வந்த வெண்மான் கொண்டான் வடக்கு தெருவை சேர்ந்த சரத்குமார் (25) என்பவரை கைது செய்தனர்.

News April 20, 2025

அரியலூரில் பயிற்சி முகாம்; கலெக்டர் அறிவிப்பு

image

அரியலூரில் 2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் 21 நாட்கள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வரும் ஏப்.25 முதல் மே.25 வரை நடைபெறுகிறது. இதில், அரியலூர் மாவட்டத்தை சார்ந்த 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் மாணவர் அல்லாதவர் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பொ. இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!