News March 5, 2025

தனியார் வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் தகவல்

image

பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரியில் வரும் 22.03.2025 அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் சுகுமார் இன்று தெரிவித்துள்ளார். முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் டிகிரி கல்வித்தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைநாடுநர்களை தேர்வு செய்யவுள்ளனர். <>இந்த <<>> இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம்.SHARE IT

Similar News

News August 8, 2025

இன்றைய இரவு ரோந்து காவல்துறை அதிகாரிகள்

image

நெல்லை மாவட்டத்தில் இன்றிரவு (ஆகஸ்ட் 8) முதல் நாளை காலை 6 மணி வரை உட்கோட்ட வாரியாக ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் மற்றும் அவர்களுடைய கைபேசி எண்ணுடன் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்மந்தபட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். மேலும், நேரடியாக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டு உள்ளது.

News August 8, 2025

நெல்லை போலீசார் சாதனை – கமிஷனர் பாராட்டு

image

தமிழ்நாடு காவல் துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் 23.07.2025 முதல் 26.07.2025 வரை சென்னை ஒத்திவாக்கத்திலுள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகர காவல் துறையை சேர்ந்த காவலர்கள் பதக்கங்களை வெற்று சாதனை படைத்தனர். அவர்களை போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதி மணி இன்று (ஆகஸ்ட் 8) நேரில் அழைத்து பாராட்டினார். போலீஸ் துணை கமிஷனர்கள் உடன் இருந்தனர்.

News August 8, 2025

நெல்லை இளைஞர்களே அரசு வேலை – ரூ.68,000 வரை சம்பளம்!

image

நெல்லை இளைஞர்களே, தமிழக சுற்றுசூழல் துறையில் புராஜக்ட் அசோசியேட், கணக்கு அதிகாரி, உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி, தட்டச்சு என பணிக்கேற்ற தகுதியுடையோர் <>இங்கே க்ளிக்<<>> விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.28,500 – 68,400 வரை வழங்கப்படும். ஆகஸ்ட் 15க்குள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். வேலை தேடும் நபர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!