News March 30, 2025

தனியார் பள்ளி வாகனம் மின் கம்பம் மீது மோதி விபத்து 

image

ராணிப்பேட்டை, கலவை அருகே ஸ்ரீ ஜெயம் நாமக்கல் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. நேற்று மாலை பள்ளி பேருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு அனந்தலை நோக்கி பஸ் செல்லும் போது வாலாஜா பூக்கார தெருவில் வேகத்தடையில் நிலைத்தடுமாறி அங்கிருந்த மின் கம்பத்தில் மோதி பஸ் நின்றது. அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு மாணவருக்கும் காயம் ஏற்படவில்லை. விரைந்து வந்த மின்சார ஊழியர்கள் திருத்தமாக செயல்பட்டு பள்ளி வாகனத்தை மீட்டனர்.

Similar News

News April 2, 2025

இராணிப்பேட்டை: காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை

image

இராணிப்பேட்டை மாவட்டம் ஆத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவிலில் இன்று (ஏப்ரல் 02) அன்று காமாட்சி ஏலவார்குழலி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அங்குள்ள பக்தர்கள் அனைவரும் பூஜையில் கலந்துக்கொண்டு அம்மனின் தரிசனத்தை பெற்றுக்கொண்டனர். கோவில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

News April 2, 2025

குழந்தையாக பிறக்கும் பாலமுருகன்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இரத்தினகிரி பாலமுருகன் கோயில் உள்ளது. இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிக்கு பாலமுருகனே குழந்தையாக பிறப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும், நோய் நொடி நீங்கி வளமான வாழ்வு பெற பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 2, 2025

குற்றச்செயலில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

image

இராணிப்பேட்டை மாவட்டம் அணைக்கட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த தமிழ்ச்செல்வன் மற்றும் எழிலரசன் ஆகிய இரண்டு நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் ஜெ.பு.சந்திரகலா இன்று தமிழ்ச்செல்வன் எழிலரசன் ஆகியோர்களை குண்டர் சட்டத்தின் கீழ் வேலூர் மத்திய சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தார்.

error: Content is protected !!