News June 9, 2024

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.8.59 லட்சம் மோசடி

image

ஒசூா் பேகேபள்ளி, கோவிந்த அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சரவணன் (46). இவரது சமூகவலைதள கணக்கிற்கு மாா்ச் 23ம் தேதி வந்த குறுந்தகவலில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை நம்பி ரூ.8.59 லட்சத்தை முதலீடு செய்தாா். அதன்பிறகு எவ்வித பணப்பரிமாற்றமும் இல்லாததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சரவணன் கடந்த 7ம் தேதி இணைய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

Similar News

News April 20, 2025

இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

image

பாகலூரை அடுத்து மாலூர் செல்லும் சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை எடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் இன் உதவியுடன் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 15 வயது சிறுவனுக்கு எந்த காயமும் இன்றி உயிர்பிழைத்தார்.

News April 20, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்களை தெரிஞ்சிக்கோங்க மக்களே! அஞ்செட்டி-9789271329, தேன்கனிக்கோட்டை-9445000542, ஓசூர்-9445000541, சூளகிரி-9080745484, போச்சம்பள்ளி-9445000540, ஊத்தங்கரை-9445000539, பர்கூர்-7825873359, கிருஷ்ணகிரி-9445000538. *மிக முக்கிய எண்களான இவற்றை உடனே சேவ் பண்ணிக்கோங்க. உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்*

News April 20, 2025

கிருஷ்ணகிரி: கடன் தொல்லை நீங்க செல்ல வேண்டிய கோவில்

image

கிருஷ்ணகிரி, ஒசூரில் அருள்மிகு சந்திர சூடேசுவரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் சந்திரசூடேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இங்கு வந்து சிறப்பு பூஜை செய்தால் வேலைவாய்ப்பு மற்றும் கடன் தொல்லை நீங்கும் என்பது இத்தலத்திற்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை. குழந்தை பாக்கியம் பெறவும் இக்கோவிலுக்கு வரலாம். *கடனற்று வாழ இங்கு செல்லவும். நண்பர்களுக்கும் பகிரவும்*

error: Content is protected !!