News April 8, 2025
தண்ணீர் தொட்டியில் குடித்து, குளித்தும் மகிழ்ந்த யானைகள்

ஸ்ரீவி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வன விலங்குகள் அதிகம் வசிக்கும் 50 இடங்களில் நிரந்தர தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அதில் ரெங்கர் கோயில் பீட் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் யானைகள் குட்டியுடன் குளிக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வனம் மற்றும் சுற்றுகாலநிலை மாற்றம் துறைகூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹு பகிர்ந்துள்ளார்.
Similar News
News April 19, 2025
கார் மோதியதில் காவலாளி உயிரிழப்பு

அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் காவலாளி சித்தையன். இவர் டூவிலரில் வாழ்வாங்கிக்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி வரும் போது தூத்துக்குடியில் இருந்து வந்த கார் இவர் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சித்தையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பந்தல்குடி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 18, 2025
சதுரகிரி மலைப்பாதையில் யானைகள் நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம்

ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் சதுரகிரி சுந்தரமகலிங்கம் கோயில் உள்ளது. உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுப்படி கடந்த 3-ம் தேதி முதல் பக்தர்கள் தினசரி 100 பக்தர்கள் மலையேறி சென்று வழிபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்று விட்டு இறங்கி கொண்டிருந்த போது சின்னபசுக்கிடை – இரட்டைலிங்கம் இடையே யானைகள் கூட்டமாக வந்ததால் பக்தர்கள் அலறி அடித்து ஓடினர்.
News April 18, 2025
விருதுநகரில் 4 பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் – தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டத்தில் 4 வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும் என சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதில் நரிக்குடி மறையூர் சத்திரம், ராஜபாளையம் வட்டம் மீனாட்சிபுரம் வானிறைக்கல், குகைஓவியம், புடைப்புச் சிற்பங்கள், மம்சாபுரம் நாயக்கர் கால மண்டபம், பிள்ளையார்நத்தம் மண்டபம் ஆகியவை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்பட உள்ளது.