News December 6, 2024
தஞ்சையில் கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை (டிச.7) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கை – தமிழக கடற்கரையை டிசம்பர் 12ஆம் தேதி அடையும் என கூறப்படுகிறது. இதனால் டிசம்பர் 11ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News August 5, 2025
தஞ்சை மாவட்ட டிஎஸ்பி-க்களின் தொடர்பு எண்கள்

தஞ்சை டவுன் – சோமசுந்தரம் (04362-251266)
வல்லம் – கணேஷ்குமார் (04362-277791)
தஞ்சை ரூரல் – முருகவேல் (04374-222711)
திருவையாறு – அருள்மொழியரசு (04362-277340)
கும்பகோணம் – அங்கித் சிங் (0435-2403241)
திருவிடைமருதூர் – ஜி.கே.ராஜு (0435-2462255)
பட்டுக்கோட்டை – ரவிச்சந்திரன் (04373-255567)
ஒரத்தநாடு – கார்த்திகேயன் (04372-233280) SHARE பண்ணுங்க!
News August 5, 2025
தஞ்சை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தஞ்சாவூர் பர்மா காலனியை சேர்ந்தவர் சந்தோஷ் (27). டிரைவரான இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனை செல்வநாதன் (38) என்ற நபர் கண்டித்த போது, இருவருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு சந்தோஷ் மற்றும் அவரது நண்பன் அமரேஷ் இணைந்து செல்வநாதனை வெட்டிப் படுகொலை செய்தனர். இவ்வழக்கை விசாரித்த தஞ்சை நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
News August 5, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட். 04) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.