News April 7, 2025

தஞ்சையில் ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை

image

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் காவேரி செல்வி. கடந்த 2023 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது தஞ்சாவூர் ஆயுதப்படை காவலில் பணிபுரிந்து வந்த நிலையில், இதற்காக தஞ்சாவூர் மணிமண்டபம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 17, 2025

தஞ்சை: வராக ஜெயந்திக்கு இதை மறக்காதீங்க

image

இரண்யாட்சன் என்ற அசுரனிடம் இருந்த இந்த பூமியை பூமியை காக்க விஷ்ணு பகவான் எடுத்த மூன்றாவது அவதாரம் தான் வராக அவதாரம். நாளை வராக ஜெயந்தி திதி வர உள்ளது. இந்த நாளில் வராகரை வழிபட்டால் பெயர், புகழ், அந்தஸ்து, ஆயுள் ஆரோக்கியம், ஐஸ்வரியம் இவை எல்லாம் ஒரு சேர கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படி இல்லையெனில் வீட்டிலேயே பெருமாள் படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபடலாம். உங்கள் உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News April 17, 2025

தஞ்சை: நிலுவை மனுக்கள் குறித்து ஆலோசனை கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் மாவட்ட கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம்  தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் இன்று (17.04.2024) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் தஞ்சாவூர் வருகையின் போது மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகள், மக்களுடன் முதல்வர் முகாம்களில் பெறப்பட்ட நிலுவை மனுக்கள் தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

News April 17, 2025

தஞ்சை: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து கொள்முதல்

image

தஞ்சை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஒரத்தநாடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலமாக நடப்பு 2025-26-ம் ஆண்டில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உளுந்து மற்றும் பச்சைப்பயறு நன்கு சுத்தம் செய்து எடுத்துவர வேண்டும். ஈரப்பதம் 12% க்குள் இருக்குமாறு உலர வைத்து, மற்ற பொருட்கள் கலப்பின்றி விவசாயிகள் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!