News December 4, 2024
தஞ்சை: 15 பேருக்கு செயற்கை அவயங்கள்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடலியல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வுத் துறை சார்பில் நேற்று 15 பேருக்கு ரூ. 9.21 லட்சத்தில் செயற்கை அவயங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில், மருத்துவக்கல்லூரி முதல்வா் பாலாஜிநாதன் செயற்கை கால், கைகளை வழங்கினார்.
Similar News
News August 9, 2025
தஞ்சாவூர் மாவட்டத்தில் குடற்புழு நீக்க முகாம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 மற்றும் 18 ஆகிய இரண்டு தேதிகளில் குடற்புழு நீக்கம் முகாம் நடைபெற உள்ளது. அனைத்து பள்ளிகளிலும் நடைபெறும் இந்த முகாம் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என கூறியுள்ளார். மேலும் இந்த முகாமில் 5,86,000 குழந்தைகள் மற்றும் 1,98,000 பெண்களும் பயன் அடைவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
தஞ்சை: புலனாய்வுத் துறையில் வேலை! ரூ.1,42,400 சம்பளம்!

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News August 9, 2025
தஞ்சை: பொது விநியோக குறைதீர் கூட்டம்

தஞ்சை மாவட்டத்திற்கான பொது விநியோக குறைதீர்க்கும் நாள் கூட்டம் தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மற்றும் திருவோணம் பகுதிகளில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளனர்.