News March 25, 2025
தஞ்சாவூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் மார்ச்.22ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெற இருந்தது. ஒரு சில நிர்வாக காரணங்களால் நடைபெறாமல் போனது. இந்நிலையில் வரும் மார்ச்.29ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். கிராம மக்களுக்கு SHARE பண்ணுங்க..
Similar News
News August 9, 2025
தஞ்சாவூர்: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த எண்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். 24 மணி நேரமும் பாதுகாப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
சைபர் பாதுகாப்பு ( 1930 )
இந்த எண்களை Save பண்ணி வச்சுக்கோங்க ! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News August 9, 2025
தஞ்சை: தளிர் திட்டத்தை பார்வையிட்ட கலெக்டர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாடில்லா குழந்தைகளாக வளர்த்திடும் “தளிர் “திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை இன்று துவக்கி வைத்து குழந்தையின் நீளத்தினை இன்பன்டோமீட்டர் கருவி கொண்டு அளவிடும் பாணியை ஆட்சியர் பார்வையிட்டார்
News August 9, 2025
வீட்டின் பூட்டை உடைத்து நான்கு பவுன் நகை கொள்ளை

தஞ்சாவூர் தமிழ்நகர் பகுதியை சேர்ந்தவர் வீரமணிகண்டன். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இவரின் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த நான்கு பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து வீரமணிண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.