News April 23, 2025
தஞ்சாவூர்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சையில் செயல்பட்டு வரும் பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான அரசு பள்ளியில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான கல்வி சேர்க்கை நடைபெறுகிறது. 1ஆம் முதல் 11ஆம் வகுப்பு வரை நடைபெறும் இந்த சேர்க்கை முகாமில் தஞ்சை மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள பார்வைத்திறன் குறைவுடைய மாணவர்கள் சேர்ந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
Similar News
News April 23, 2025
தஞ்சை மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

தஞ்சாவூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகங்களின் தொலைபேசி எண்கள் பின்வருமாறு..தஞ்சாவூர் – 04362-230456, திருவையாறு – 04362-260248, பூதலூர் – 04362-288107, திருவிடைமருதூர் – 0435-2460187, கும்பகோணம் – 0435-2430227, பாபநாசம் – 04374-222456, பட்டுக்கோட்டை – 04373-235049, பேராவூரணி – 04362-288107, ஒரத்தநாடு – 04372-233225. இதை தெரியாதவர்களுக்கு ஷேர் செய்யவும்
News April 23, 2025
தஞ்சாவூர்: ரூ.35,000 சம்பளத்தில் வேலை. இதை செய்தால் போதும்..

தேசியத் தலைநகர் பிராந்தியப் போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 9 பதவிகளின் கீழ் 72 காலிப்பணிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிப்ளமோ, ஐடிஐ & பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.18,250 முதல் 75,850 வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஏப்.24-க்குள் (நாளை) https://ncrtc.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE செய்யவும்!
News April 23, 2025
தஞ்சாவூர் வழியாக திருச்சி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக திருச்சி – தாம்பரம் இடையே (ஏப்ரல்.29) ஆம் தேதி முதல் ஜன சதாப்தி சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே அலுவலகம் நெரிசலைத் தவிர்க்க திருச்சி -தாம்பரம் இடையே ஜன சதாப்தி சிறப்பு விரைவு ரயில் (ஏப்.29) முதல் (ஜூன்.29)வரை வாரந்தோறும் செவ்வாய், புதன் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட உள்ளது.