News March 31, 2024

தகராறில் காதை கடித்த கொடூர சம்பவம்

image

சிவகாசி அருகே அனுப்பன்குளத்தை சேர்ந்தவர் சிவபெருமாள் 33. இவர் தனது ட்ராக்டரை வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்து இருந்த நிலையில் அருகில் வசிக்கும் மாரியப்பன் தன் வீட்டிற்கு செல்ல டிராக்டர் இடையூறாக இருப்பதாக அதை அகற்ற கூறியுள்ளார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் மாரியப்பன் சிவபெருமாளின் காதை கடித்துள்ளார். காயமடைந்த சிவபெருமான் அளித்த புகாரில் மாரியப்பன் மீது வழக்குபதிவு.

Similar News

News April 18, 2025

விருதுநகரில் 4 பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் – தங்கம் தென்னரசு

image

விருதுநகர் மாவட்டத்தில் 4 வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும் என சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதில் நரிக்குடி மறையூர் சத்திரம், ராஜபாளையம் வட்டம் மீனாட்சிபுரம் வானிறைக்கல், குகைஓவியம், புடைப்புச் சிற்பங்கள், மம்சாபுரம் நாயக்கர் கால மண்டபம், பிள்ளையார்நத்தம் மண்டபம் ஆகியவை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்பட உள்ளது.

News April 18, 2025

விருதுநகரில் SI பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்

image

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் சார்பு ஆய்வாளர்கள் (SI) 1299 பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை ஏப்.01 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பயிற்சி வகுப்புகள் ஏப்.23 முதல் ஆரம்பிக்கவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News April 18, 2025

விருதுநகரில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

image

விருதுநகரில் செயல்படும் பிரபல ஜவுளி நிறுவனத்தில் டெய்லர், தரக் கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட பிரிவுகளில் 100 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதில் மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். வின்னப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து மே.31 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

error: Content is protected !!